118 ஆகஸ்டு – 19
உலக மனித நேய தினம்
(World Humanitarian Day)
போர், இயற்கைப் பேரழிவு, நோய், ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்ட உலக மனித நேய தினம் ஆகஸ்டு 19 அன்று கொண்டாடப்படுகிறது. 2008ஆம் ஆண்டு ஐ.நா. சபையினால் உருவாக்கப்பட்டது. துயரத்தால் பாதிக்கப்பட்டோருக்காக பணிபுரிவோர் மற்றும் இப்பணியில் ஈடுபடும்போது காயம் அடைந்தோர், உயிரிழந்தோர்களை நினைவுகூரும் தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக புகைப்பட தினம்
(World Photography Day)
லூயிசு டாகுவேரே என்பவர் 1839ஆம் ஆண்டு டாகுரியோடைப் எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை அறிமுகப்படுத்தினார். இதனை பிரான்ஸ் அரசு ஆகஸ்டு 19ஆம் தேதி ப்ரீடுதி வேர்ல்டு என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. புகைப்படத்தின் சிறப்பு, புகைப்படக் காரர்களின் திறமையை கொண்டாடும் வகையில் இத்தினம் அமைகிறது.
Feedback/Errata